×

திருத்தணி பகுதியில் எடப்பாடிக்கு அதிமுகவினர் 2 கோஷ்டிகளாக வரவேற்பு; தொண்டர்கள் சலசலப்பு

திருத்தணி: திருப்பதிக்கு சென்று வெங்கடேச பெருமாளை தரிசனம் செய்ய சென்ற எடப்பாடி பழனிசாமிக்கு கட்சியினர் இரண்டு கோஷ்டிகளாக பிரிந்து வரவேற்பு கொடுத்ததால் தொடர்களிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக எதிர்கட்சி தலைவராகவும், இடைகால பொதுச்செயலாளராகவும் இருப்பவர் எடப்பாடி பழனிசாமி.  இவர், சென்னையில் இருந்து திருவள்ளூர், திருத்தணி வழியாக ஆந்திர மாநிலத்தில் உள்ள திருமலைக்கு வெங்கடேச பெருமாளை தரிசனம் செய்வதற்காக, சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை வழியாக நேற்று மதியம் 3 மணி அளவில் கார் மூலம் வந்தார்.

இந்நிலையில், அவரை வரவேற்பதற்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திருத்தணி கோ.அரி தலைமையில் கட்சியினர் ஆசிரியர் நகர் பகுதியில் வரவேற்பு கொடுத்தனர். மேலும்  இந்த பகுதியில் அரி மற்றும் அவருடைய ஆதரவாளர்கள்  சாலையை வழிமறித்து பேனர்கள் வைத்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதேபோல், அரக்கோணம் புறவழிச்சாலை பகுதியில் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் ஈ.என்.கண்டிகை ரவி, பள்ளிப்பட்டு ஒன்றிய செயலாளர் டி.டி.சீனிவாசன் ஆகியோர் தலைமையில் தனியாக எடப்பாடி பழனிசாமிக்கு அவரது ஆதரவாளர்கள் பேனர்கள் வைத்து வரவேற்பும் கொடுத்தனர். இதனால் அதிமுக கட்சியினர் இடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : AIADMK ,Edappadi ,Tiruthani , AIADMK welcome Edappadi in Tiruthani area in 2 factions; Volunteers bustle
× RELATED அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்கள்: எடப்பாடி வேண்டுகோள்