×

அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்கள்: எடப்பாடி வேண்டுகோள்

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: தற்போது, எந்த ஆண்டும் இல்லாத வகையில் வெயிலின் தாக்கம் மிகவும் கடுமையாக இருப்பதால், வெயிலின் தாக்கத்தில் இருந்து மக்களை காக்கும் பொருட்டு, அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்உடனடியாக அமைக்க வேண்டும். நாளை (வியாழன்) காலை முதல் மக்களின் தாகத்தை தணிக்கும் அறப் பணிகளில் ஈடுபட வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்கள் செய்திட வேண்டும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் அமைக்கப்படும் தண்ணீர் பந்தல்களை நேரில் பார்வையிட வேண்டும்.

The post அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்கள்: எடப்பாடி வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Edappadi ,Chennai ,General Secretary ,Edappadi Palaniswami ,
× RELATED மேற்கு மண்டல அதிமுகவில் உள்கட்சி...