×

எஸ்.பி. வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்யக்கூடாது: சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மீண்டும் திட்டவட்டம்

சென்னை: எஸ்.பி. வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்யக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ரூ.800 கோடி டெண்டர் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்துள்ள 2 வழக்குகளை ரத்து செய்யக்கோரி வேலுமணி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி தலைமையிலான அமர்வு முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது.   


Tags : S.S. GP ,Velimani ,Tamil Nadu Government ,Chennai ,High Court , எஸ்.பி. வேலுமணி ,டெண்டர் முறைகேடு, ரத்து, சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசு
× RELATED மதுரை மாநகராட்சியில் கால்நடை...