வாஷிங்டன்: ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக இந்திய வம்சாவளி லக்ஷ்மன் நரசிம்மன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். லக்ஷ்மன் நரசிம்மன் அடுத்த ஆண்டு ஏப்ரல் வரை இடைக்காலத் தலைவராகத் தொடரும் ஹோவர்ட் ஷுல்ட்ஸுக்குப் பதிலாக 2023 வரை ஸ்டார்பக்ஸ் ஆலோசகராக இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த ஸ்டார்பக்ஸ் நிறுவனம் உலகின் மிகப்பெரிய காபி உணவகமாக உள்ளது. இந்த நிறுவனத்தின் உணவகங்கள் இந்தியா உள்பட உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் சுமார் 30,00-க்கும் மேற்பட்ட இடங்களில் இயங்கி வருகிறது.
இந்த நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த லக்ஷ்மன் நரசிம்மன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ரெக்கிட் பென்கிசர் குழுமத்தின் லைசால் மற்றும் என்பாமில் பேபி பார்முலா ஆகிய நிறுவனங்களில் தலைமை நிர்வாகியாக பணியாற்றி உள்ளார்.