சென்னை: விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை அமைதியாக நடத்துவது குறித்து டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் காணொலியில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. அனைத்து காவல் ஆணையர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுடன் டிஜிபி ஆலோசித்தார். ஊர்வலத்தின்போது எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறா வண்ணம் தடுக்க டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார்.