×

சாலை பராமரிப்பு பணிகளை தனியார் ஒப்படைத்ததை ரத்து செய்ய வேண்டும்

சென்னை: தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்க தலைவர் சண்முகராஜா முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: சாலை பராமரிப்பு பணிகளை தனியார் ஒப்பந்ததாரர் மூலம் மேற்கொள்ளும் கடந்த அரசின் கொள்கை முடிவை ரத்து செய்து பராமரிப்பு பணிகள் சாலைப் பணியாளர்களைக் கொண்டே செய்ய வேண்டும் என்பதை கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும். 5000க்கும் மேற்பட்ட சாலைப்பணியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப ேவண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை அதிமுக அரசிடம் தொடர்ந்து பல போராட்டங்களை நடத்தி வலியுறுத்திய போதும் எங்களுடைய கோரிக்கைகளை கண்டுகொள்ளவில்லை. ஆனாலும் நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத் தேர்தல் பிரசார கூட்டங்களிலும், தேர்தல் அறிக்கையிலும் சாலைப் பணியாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று தாங்கள் உறுதியளித்த நிலையில்,  தற்போது தமிழகத்தின் முதல்வராக சாலைப் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவீர்கள் என வேண்டுகோள் வைக்கிறோம். …

The post சாலை பராமரிப்பு பணிகளை தனியார் ஒப்படைத்ததை ரத்து செய்ய வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu ,Highway Department Road Staff Union ,President ,Shanmugaraja ,Chief Minister ,M.K.Stalin ,
× RELATED கோடைகாலத்தில் சூரியனிலிருந்து வரும்...