சென்னை: தமிழ்நாடு அரசின் தகைசால் தமிழர் விருதுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தேர்வு செய்யப்பட்டார். சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த விருதை வழங்க உள்ளார். தமிழ்நாட்டுக்கும், தமிழ் இனத்தின் வளர்ச்சிக்கும் பாடுபட்டவர்களை கவுரிவிக்கும் வகையில் இவ்விருது வழங்கப்படுகிறது.