×

பணத்துக்கு தட்டுப்பாடு ரூ.7 கோடிக்கு வீட்டை விற்றார் நடிகை அம்பர்

லாஸ்ஏஞ்சல்ஸ்: பணத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் ஜானி டெப்பின் முன்னாள் மனைவியும் நடிகையுமான அம்பர் ஹியர்ட், தனது வீட்டை ரூ.7 கோடிக்கு விற்றுள்ளார். ஹாலிவுட் நடிகர் ஜானி டெப்பை திருமணம் செய்து பிறகு, கருத்து வேறுபாட்டால் நடிகை அம்பர் ஹியர்ட் அவரை பிரிந்தார். ஜானி டெப் தன்னை சித்ரவதை செய்வதாகவும் பாலியல் தொல்லை தருவதாகவும் அவர் மீது புகார் கூறினார் அம்பர். இந்நிலையில் அம்பர் மீது ஜானி டெப் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஜானி டெப்புக்கு சாதகமான தீர்ப்பு வந்தது. அத்துடன் பொய் புகார் அளித்ததால் ரூ.116 கோடியை ஜானிக்கு அம்பர் கொடுக்க வேண்டும் என்றும் தீர்ப்பு கூறப்பட்டது. இந்நிலையில் பொருளாதார நெருக்கடியில் இருப்பதாகவும் தன்னிடம் பணம் இல்லை என்றும் அம்பர் கூறியிருந்தார். தனக்கு பணம் தேவையில்லை. தான் குற்றமற்றவன் என நிரூபிக்கப்பட்டதே போதும் என ஜானி டெப் கூறினார். இந்நிலையில் கலிபோர்னியாவிலுள்ள தனது வீட்டை ரூ.7 கோடியே 86 லட்சத்துக்கு அம்பர் விற்றுள்ளார். இதில் ரூ.40 லட்சம் அவருக்கு லாபம் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது. வசித்து வந்த வீட்டையே விற்கும் அளவுக்கு அம்பர் பணக் கஷ்டத்தில் இருக்கிறார். அவருக்கு பட வாய்ப்புகளும் இல்லை என அவரது வக்கீல் கூறியிருக்கிறார்.

Tags : Amber , Actress Amber sold her house for Rs 7 crore due to lack of money
× RELATED ரூ.10 கோடி மதிப்பு ஆம்பர் கிரீஷ் பறிமுதல்: 4 பேர் கும்பல் கைது