டெல்லி: அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கனிமொழி எம்.பி.கூறியுள்ளார். பாஜக ஆட்சியில் பெட்ரோல், டீசல் சமையல் எரிவாயு விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது என்றும் சமையல் எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் உள்ள சில தொழில் அதிபர்கள் வாழ்வதற்கு அரசு உதவி செய்து வருகிறது என்று கனிமொழி எம்.பி.குற்றசாட்டு வைத்துள்ளார்.