×

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே ரவுடி வெட்டிக் கொலை: போலீஸ் விசாரணை

நெல்லை: நெல்லை மாவட்டம் நாங்குநேரியை அடுத்த மஞ்சங்குளத்தை சேர்ந்த சுந்தரபாண்டியன் மகன் சாமிதுரை(வயது25). இவர் தந்தையின் விவசாய நிலத்தில் விவசாய பணிகளை மேற்கொண்டு வந்ததாக தெரிகிறது. இதனிடையே இவர் மீது ஒரு கொலை, அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. அந்த பகுதியில் ரவுடியாகவே வலம் வந்தார்.

தொடர்ந்து பல்வேறு அடிதடி வழக்குகளில் சிக்கியதால் இவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த 30 நாட்களுக்கு முன்னர் சிறையில் இருந்து இவர் விடுதலையாகி உள்ளார். இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு அடுத்த மாதம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவில் வீட்டின் வெளியே இருந்த பேருந்து நிறுத்தத்தில் தூங்கிக் கொண்டிருந்த அவரை மர்ம நபர்கள் அருகில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்று அரிவாளால் வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.

இதில் சம்பவ இடத்திலேயே சாமிதுரை உயிரிழந்தார். இதுகுறித்த தகவல் அறிந்த நாங்குநேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாமிதுரை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பழிக்கு பழியாக சாமிதுரை கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.


Tags : Nanguneri, Nellai district , நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே ரவுடி வெட்டிக் கொலை: போலீஸ் விசாரணை
× RELATED கேலி, கிண்டல் செய்ததால் ஆத்திரம்; மகனை பழிவாங்க தந்தை கொலை: வாலிபர் கைது