×

கேலி, கிண்டல் செய்ததால் ஆத்திரம்; மகனை பழிவாங்க தந்தை கொலை: வாலிபர் கைது

களக்காடு: நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே மறுகால்குறிச்சியை சேர்ந்தவர் செல்லையா (50). இவர் கூலி தொழிலாளி. இவரது மனைவி மாரியம்மாள் (48). இவர்களுக்கு மாரியப்பன் என்கிற மகனும், 2 மகள்களும் உள்ளனர். இந்த நிலையில்,மாரியப்பன் அதே ஊரைச் சேர்ந்த ராஜா (27) என்பவரை கிண்டல் செய்துள்ளார். இதுதொடர்பாக மாரியப்பனுக்கும் ராஜாவிற்கும் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.இந்த நிலையில், நேற்று செல்லையா தனது வீட்டு முன் நின்றிருந்தபோது அங்கு வந்த ராஜாவுக்கும், செல்லையாவிற்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ராஜா, செல்லையாவை கம்பால் சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த அவர் கதறியதால் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். இதைப்பார்த்ததும் ராஜா அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதன்பிறகு செல்லையாவை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அறிந்ததும் நாங்குநேரி போலீசார் சென்று விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக வழக்குபதிவு செய்து ராஜாவை கைது செய்தனர். …

The post கேலி, கிண்டல் செய்ததால் ஆத்திரம்; மகனை பழிவாங்க தந்தை கொலை: வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Waliber ,Gelagadam ,Nanguneri, Nellai District, Nanguneri ,Mariammal ,Dinakaran ,
× RELATED குடிபோதையில் பைக் ஓட்டியதை பிடிக்க...