சென்னை : திருவண்ணாமலை கிரிவல பாதையில் பாலி தீர்த்தம் அருகில் அமைந்திருந்த பக்த மார்க்கண்டேயர் கோவிலை இடித்து காபி கடை அமைத்துள்ளதாகக் கூறி, தமிழ் தேசிய மக்கள் கட்சியின் தலைவர் சிவபாபு என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் அறநிலையத் துறை ஆணையர் விரிவான விசாரணையை நடத்தி கோவிலின் உண்மையான இருப்பிடத்தை மூன்று மாதங்களில் கண்டறிய வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.