தியாகதுருகம் : தியாகதுருகம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சொர்ணாம்பிகை மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழாவையொட்டி கொடியேற்றம் நடைபெற்றது இதனைத் தொடர்ந்து கடந்த 15ம் தேதி அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும் அதனைத் தொடர்ந்து சாமி வீதி உலாவும் நடைபெற்றது. கடந்த 21ம்தேதியன்று காத்தவராயன் ஆரியமாலா திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் தீ மிதி திருவிழாவின் முக்கிய நிகழ்வான அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு சந்தைமேடு கிராமத்தில் இருந்து சக்தி அழைத்து வரப்பட்டு சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில் தியாகதுருகம் மட்டுமின்றி அதைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தீமிதி திருவிழாவில் இரண்டுக்கும் மேற்பட்ட பக்தர்கள் எதிர்பாராதவிதமாக தீயில் விழுந்ததால் கை கால்களில் தீக்காயங்கள் ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.