சென்னை: தந்தை சிவாஜி கணேசன் எழுதி வைத்த உயில் ஜோடிக்கப்பட்டது என்று இரு சகோதரிகள் கூறும் குற்றச்சாட்டு தவறானது என நடிகர்கள் ராம்குமார், பிரபு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. சிவாஜி சொத்துகளில் பங்கை பிரித்து தர உத்தரவிடக்கோரி அவரது மகள்கள் சாந்தி, ராஜ்வி தொடர்ந்த வழக்கின் விசாரணையை ஜூலை 21ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி உத்தரவிட்டுள்ளார்.