×

அரசுக்கு கெட்டப் பெயர் ஏற்படுத்தவே வன்முறை: பள்ளி பேருந்துகள் உட்பட மொத்தம் 67 வாகனங்களுக்கு தீ வைப்பு..அமைச்சர் எ.வ.வேலு பேட்டி

கள்ளக்குறிச்சி: அரசுக்கு கெட்டப் பெயர் ஏற்படுத்தவே சமூக விரோதிகள் வன்முறையில் ஈடுபட்டதாக  அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். அமைச்சர்கள் எ.வ.வேலு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கணேசன் ஆகியோர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது பேசிய அமைச்சர் எ.வ.வேலு, மாணவி குடும்பத்தினரை அரசு சார்பில் யாரும் சந்திக்கவில்லை என கூறுவது தவறான தகவல். பள்ளி பேருந்துகள் உட்பட மொத்தம் 67 வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. மாணவர்களின் சான்றிதழ்கள் உட்பட ஏராளமான பொருட்களும் தீவைத்து எரிக்கப்பட்டன. மாணவர்கள் என்ற போர்வையில் சில விஷமிகள் ஊடுருவி அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தவே வன்முறை நிகழ்த்தினர் என்று குறிப்பிட்டார்.

Tags : Minister ,A. Etb Velu , Government, Violence, School Bus, Vehicle, Fire, Minister A.V. Velu
× RELATED பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல்...