×

FREE FIRE கேம் மூலம் காதல்: சிறுமியை கடத்திய மராட்டிய இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது

மதுரை: மதுரை அருகே உள்ள பசுமலை கிராமத்தை சேர்ந்த சிறுமியை பிரீபையர் கேம் மூலம் பழகி மகாராஷ்டிரா மாநிலதிற்கு அழைத்து சென்ற வடமாநில இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளார்.  கடலூர் மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் மகாராஷ்டிரா மாநிலத்தில் வேலை செய்த பொது ஒரு பெண்ணை திருமணம் முடித்து இருக்கிறார். அவருக்கு செல்வா (22) என்ற மகன் உள்ளார். ராஜ்கோட்  மாவட்டம் புதிய ரயில் நிலைய காலணியில் வசிக்கும் செல்வா கடந்த 2021-ம் ஆண்டு  பிரீபைர் கேம் மூலம் மதுரை பசுமலையை சேர்ந்த 11ம் வகுப்பு பள்ளி மாணவியிடம் பழகி இருக்கிறார். காலப்போக்கில் 16 வயது சிறுமியுடன் காதல் ஏற்பட்டுள்ளது.

அந்த சிறுமியை செல்வா திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடந்த டிசம்பர் 2021-ம் ஆண்டு அந்த சிறுமியை மதுரை பெரியார் பேருந்து நிலையம் வரவழைத்து அங்கிருந்து  மகாராஷ்டிரா மாநிலத்துக்கு அழைத்து சென்றுள்ளார். இதையடுத்து அந்த சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் செல்போன் மூலம் அந்த சிறுமியை புனேவில் இருந்து கடந்த ஏப்ரல் மாதம் மீட்டனர். பின்னர் மகாராஷ்டிரா மாநிலத்தில் ராஜ்கோட் மாவட்டம் சென்று செல்வாவை நேற்று மதுரைக்கு அழைத்து வந்தனர். அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து அவரை மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். 


Tags : Maratha , Love through FREE FIRE game, Maratha youth arrested POCSO Act
× RELATED மராட்டியத்தில் நடந்த பிரச்சாரக்...