சென்னை: 3 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறையின் இணை இயக்குநராக ஐஜி பவானீஸ்வரியை நியமித்து உள்துறை செயலர் பணீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார். காத்திருப்போர் பட்டியலில் இருந்த வந்திதா பாண்டே, புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பவானீஸ்வரி கவனித்து வந்த லஞ்ச ஒழிப்புத்துறையின் சிறப்பு விசாரணை பிரிவு அதிகாரியாக துரைகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.