சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் வருகை பதிவேட்டில் கையெழுத்திட நூற்றுக்கணக்கானோர் காத்திருக்கின்றனர். வருகை பதிவேட்டை கொண்டு சென்றுவிட்டதாக கூறியதால் பன்னீர்செல்வம் தரப்பினர் அதிருப்தி அடைந்துள்ளனர். வானகரம் மண்டபத்தில் உள்ள வருகை பதிவேடு அரங்கில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வருகை பதிவேட்டில் கையெழுத்திட்ட பிறகே கூட்டத்தில் பங்கேற்போம் என பன்னீர் தரப்பு உறுதியாக உள்ளது.