×

சில கடன் செயலிகள் ஆபத்தானவை... புகைப்படத்தை ஆபாசமாக மார்ஃபிங் செய்து மிரட்டுவார்கள் : டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை

சென்னை : சென்னை : சில கடன் செயலிகள் ஆபத்தானவை, எச்சரிக்கையாக இருங்கள் என அறிவுறுத்தி தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு வீடியோ வெளியிட்டுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “சமீபகாலமாக லோன் ஆப்கள் பெருகி வருகின்றன. அந்த ஆன்லைன் லோன் ஆப்களில் கடன் பெற, உங்கள் புகைப்படத்துடன் அப்ளை பண்ணச் சொல்வார்கள். உங்கள் காண்டாக்ட் லிஸ்ட்டில் சிலர் பற்றிய தகவல்களை கேட்பார்கள். உங்கள் புகைப்படத்தை ஆபாசமாக மார்ஃபிங் செய்து உங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு அனுப்பிவிடுவோம் என மிரட்டி உங்களிடம் பணம் கறப்பார்கள். உங்களுக்கு நிம்மதி போய்விடும். இந்த போட்டோ உண்மை இல்லை என்றாலும் மற்றவர்கள் நம்பமாட்டார்கள்.

இப்படி ஒரு தர்ம சங்கடமான நிலைமையில் சிக்கவைத்து உங்களிடம் பணம் வசூலிக்கும் சம்பவங்கள் அதிகமாகி வருகின்றன.இதுதொடர்பாக எங்களுக்கு புகார்கள் வந்துள்ளன. காவல்துறை மூலம் இந்த செயலிகளை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த செயலிகளை முடக்கினாலும், புதிய பெயர்களில் இந்த கடன் செயலிகள் வந்து கொண்டுதான் இருக்கும். நீங்கள் ஏமாறக் கூடாது என்பதற்காக சில செய்லிகளை சொல்கிறேன்.Euvalt, Masen Rupee, Lory loan, Wingo Loan, cici Loan, City cash ஆகிய செயலிகள் மோசடியான செயலிகள். இவற்றை ஒருபோதும் டவுன்லோடு செய்து விடாதீர்கள். ஒருவேளை உங்கள் போனில் இந்த ஆப்கள் இருந்தால் நீக்கி விடுங்கள். பாதுகாப்பாக இருங்கள் என கூறியுள்ளார்.

Tags : DGB ,Sylendra Babu , Credit, Processors, Morphing, DGP Silent Babu, Warning
× RELATED தவறு செய்யும் அதிகாரிகள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை: ஐகோர்ட் உத்தரவு