×

திமுகவின் மூத்த முன்னோடிகள் செய்த பணிகளுக்கு எதுவும் ஈடாகாது: பொற்கிழி வழங்கும் விழாவில் முதல்வர் பேச்சு

சென்னை: கலைஞர் தான் திமுகவின் வேர்; தமிழகத்தின் வேர் என்பதை யாரும் மறக்க முடியாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். பொற்கிழி வழங்கும் விழாவில் பேசிய முதல்வர், கலைஞரின் பிறந்த நாள் விழாவை ஜூன் 17ம் தேதியும் கொண்டாடுவோம்; அடுத்த ஆண்டு ஜூன் 3ம் தேதியும் கொண்டாடுவோம் என்று கூறினார். திமுகவின் மூத்த முன்னோடிகள் செய்த பணிகளுக்கு எதுவும் ஈடாகாது. பொற்கிழி வழங்குவது மூத்த முன்னோடிகளின் பணிகளுக்கு பரிகாரம் தேடுவது அல்ல என்று தெரிவித்தார்.


Tags : DMK ,Chief Minister , DMK, Senior Pioneers, Mission, Chief
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவ...