சென்னை: சனாதன தருமத்தை உயர்த்திப் பிடிக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். ஆளுநர் பொறுப்பு வகிப்பவர் அரசியலமைப்புச் சட்ட நெறிகளை மீறி பேசுவது கண்டனத்துக்குரியது. ஆளுநர் ரவி தனது பொறுப்பை உணர்ந்து பேச வேண்டும் என வைகோ தெரிவித்திருக்கிறார்.