×

சத்தியமங்கலத்தில் வாகனம் மோதி புள்ளிமான் பலி: வனத்துறையினர் விசாரணை

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான மான்கள் வசிக்கின்றன. புள்ளி மான்கள் வனத்தை விட்டு வெளியேறி அவ்வப்போது அருகே உள்ள கிராமங்களில் உள்ள விவசாய தோட்டங்களில் நுழைவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் நேற்று காலை சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் சிக்கரசம்பாளையம் அருகே  புள்ளிமான் சாலையை கடந்தபோது அவ்வழியே சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

மான் அடிபட்டு இறந்து கிடப்பதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக சத்தியமங்கலம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் இறந்த மானின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். இது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Pointman ,Satyamangalam ,Forest Department , In Satyamangalam Pointman killed in vehicle collision: Forest Department investigation
× RELATED தாளவாடி மலைப்பகுதியில் வனத்துறை வைத்த கூண்டில் சிறுத்தை சிக்கியது