×

பொதுப்பணித்துறையில் கண்காணிப்பு பொறியாளர் 6 பேர் பணியிடமாற்றம்: அரசு உத்தரவு

சென்னை: தமிழக பொதுப்பணித்துறையில் செயற்பொறியாளர்கள் 6 பேருக்கு கண்காணிப்பு பொறியாளராக பதவி உயர்வு வழங்கியும், பணியிட மாற்றம் செய்தும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசின் பொதுப்பணித்துறை செயலாாளர் தயானந்த் கட்டாரியா வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: நெல்லை பொதுப்பணித்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு கோட்ட செயற்பொறியாளர் சங்கரலிங்கம் கோவை பொதுப்பணித்துறை மருத்துவ கட்டுமான மற்றும் பராமரிப்பு கண்காணிப்பு பொறியாளராகவும், திண்டுக்கல் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு கோட்ட செயற்பொறியாளர் மாதவன் மதுரை மருத்துவ கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு கண்காணிப்பு பொறியாளராகவும், மதுரை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு துணை தலைமை பொறியாளர் பாலமுருகன் இந்து சமய அறநிலையத்துறை கண்காணிப்பு பொறியாளராகவும்,
கிருஷ்ணகிரி கட்டுமான மற்றும் பராமரிப்பு பிரிவு கோட்ட செயற்பொறியாளர் வள்ளுவன் திருச்சி கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு கண்காணிப்பு பொறியாளராகவும், சிவகங்கை மருத்துவ கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு செயற்பொறியாளர் நாகராஜ் சென்னை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு கண்காணிப்பு பொறியாளராகவும், கோவை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு துணை தலைமை பொறியாளர் மல்லிகா திருச்சி மருத்துவ கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்காணிப்பு பொறியாளராகவும் பதவி உயர்வு வழங்கி பணியிட மாற்றம் செய்யப்படுகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Transfer of 6 Supervising Engineers in Public Works: Government Order
× RELATED சாலையில் நடந்து சென்ற வாலிபரை வெட்டி செல்போன் பறிப்பு