×

ரேசன் ஊழியர்கள் வேலைநிறுத்தம்: 'No Work No Pay'என்ற அடிப்படையில் சம்பளம் பிடித்தம் செய்ய உத்தரவு!!

சென்னை : வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ரேசன் ஊழியர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்ய கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அனைத்து மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கத்தினர் (SRG8/2019) தங்களது 11 அம்ச - கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 07.06.2022 முதல் 09.06.2022 வரை மாநிலம் தழுவிய மூன்று நாள் தொடர் வேலை நிறுத்தம் நடத்தப்போவதாக அச்சங்கத்தின் மாநில தலைவர் தெரிவித்துள்ளார்.

மேற்குறிப்பிட்ட வேலை நிறுத்தம் போரட்டத்தில் அனைத்து மண்டலங்களில் பணிபுரியும் நியாயவிலைக் கடைப் பணியாளர்கள் கலந்துக் கொள்ள வாய்ப்புள்ளதால், 07.06.2022 முதல் 09.06.2022 வரை சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படாதவாறும், பொது விநியோகத்திட்டப் பணிகளுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படா வண்ணம், பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றிக் கிடைக்க தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறும்,

 போராட்டத்தில் ஈடுபடும் பணியாளர்களுக்கு பதிலாக உரிய மாற்று ஏற்பாடுகள் மேற்கொண்டு அனைத்து நியாயவிலைக் கடைகளும் திறக்கப்பட்டு செயல்படுவதை உறுதிசெய்து கொள்ளுமாறும், வேலை நிறுத்தம். போராட்டத்தில் ஈடுபடும் பணியாளர்களுக்கு அவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட நாட்களுக்கு No Work No Pay என்ற அடிப்படையில் சம்பளம் பிடித்தம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் பணியாளர்களின் விவரங்களை நாள்தோறும் பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.


Tags : Rayson , Ration, staff, strike, pay
× RELATED ரேசன் அட்டை இல்லாதவர்களுக்கு விரைவில் ரூ.6,000 புயல் நிவாரணம்