×

ஆம்னி பஸ் கவிழ்ந்து பெண் உள்பட 2 பேர் பலி

மதுராந்தகம்: சென்னை தாம்பரம், காஞ்சிபுரம் உள்பட பல பகுதிகளில் இருந்து  43 பேர் ஒரு ஆம்னி பஸ் மூலம் தென் மாவட்டத்துக்கு சுற்றுலா சென்றனர். பின்னர் அங்கிருந்து சென்னைக்கு புறப்பட்டனர். நேற்று அதிகாலை 3 மணியளவில் பஸ், மதுராந்தகம் அருகே சென்று கொண்டிருந்தது. பஸ்சை,   செங்கல்பட்டு மாவட்டம் கொட்டைமேடு கிராமத்தை சேர்ந்த டிரைவர் கமலநாதன் (48)  ஓட்டினார். மேலவலம்பேட்டையில் சென்றபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தறிக்கெட்டு ஓடி, சாலையோரத்தில் இருந்த  மரத்தின் மீது மோதி, அருகில் உள்ள பாலத்தின் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதனால் அனைவரும் அலறி கூச்சலிட்டனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு, அப்பகுதி மக்கள் ஓடி வந்து, அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து மதுராந்தகம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, கிரேன் மூலம் பஸ்சில் சிக்கியவர்களை மீட்டனர். டிரைவர் கமலநாதன் அதிர்ஷ்டவசமாக சிறிய காயத்துடன் உயிர் தப்பினார். ஆனால், நாகூர்கனி (70) என்பவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதையடுத்து, படுகாயம் அடைந்தவர்களை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு  சென்னையை சேர்ந்த டில்லிராணி (50) என்பவர் சிகிச்சை பலனின்றி  இறந்தார்.பஸ்சில் பயணம் ெசய்த 20 பேர் படுகாயமடைந்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. புகாரின்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags : Omni bus , Omni bus overturns Two people, including a woman, were killed
× RELATED புதுகையில் பைக் மீது ஆம்னி பஸ் மோதல் தந்தை, 4வயது மகள் தலை நசுங்கி பலி