×

காதல் மனைவி விவாகரத்து கேட்டதால் ஊர்க்காவல் படைவீரர் தற்கொலை: திருமணமான 5 மாதத்தில் பரிதாபம்

தண்டையார்பேட்டை: காதல் மனைவி விவாகரத்து கேட்டதால் ஊர்க்காவல் படைவீரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காசிமேடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. காசிமேடு பழைய அமராஜ்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் மதன்  (27), ஊர்க்காவல் படை வீரர். பாடி பில்டரான இவர், மிஸ்டர் தமிழ்நாடு பட்டம் வென்றுள்ளார். அதே பகுதியை சேர்ந்த ஹேமலதா (25) என்பவரை காதலித்து, கடந்த 5 மாதங்களுக்கு முன் திருமணம் செய்தார்.

கடந்த 4 நாட்களுக்கு முன், தம்பதி இடையே கருத்து வேறுபாடு காரணமாக ஏற்பட்ட தகராறில் மதன் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்டு ராயபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று  முன்தினம் இறந்தார். மதன் இறப்பில் சந்தேகம் உள்ளதாக அவரது உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும், உடலை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும், என்றனர். ஆனால், சட்ட விதிமுறைப்படி மதனின் மனைவியிடம் தான் உடல் ஒப்படைக்கப்படும் என்று போலீசார் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. மதன் தற்கொலை செய்வதற்கு முன், தனது மனைவிக்கு ‘‘நீ கேட்ட விவாகரத்து தருகிறேன். இனி என்னால் உன் படிப்பு பாதிக்காது. நீ சுதந்திரமாக இருக்கலாம்,’’ என்று செல்போனில் பதிவு செய்துவிட்டு தற்கொலை செய்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Kayts , Kayts soldier commits suicide after loving wife asks for divorce: Awful 5 months of marriage
× RELATED ஊர்க்காவல் படையினர் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்