×

ஜீயர் மீது நடவடிக்கை டிஜிபி அலுவலகத்தில் தி.க. புகார்

சென்னை: டிஜிபி அலுவலகத்தில் திராவிடர் கழகம் சார்பில் துரை அருண் என்பவர் நேற்று அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:  மன்னார்குடி ஜீயரான செண்டலக்கார ராமானுஜ ஜீயர் ‘பல்லக்கு தூக்குவதை தடுத்தால் தமிழ்நாட்டு அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் நாட்டில் நடமாட முடியாது’ என்று கொலை மிரட்டல் விடுத்து பேசியுள்ளார். சிவனடியார்கள் அமைச்சர்களை சும்மா விடமாட்டார்கள் என்றும் கூறியுள்ளார். வன்முறையையும், கலவரத்தையும் தூண்டுகிற வகையில் பேசிய ஜீயர் மீது சட்ட நவடிக்கை எடுக்குமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Tags : Zeyer ,DGP , Action on Zeyer T.G. at the DGP's office. Complaint
× RELATED பாமகவினர் மீது நடவடிக்கை எடுக்கக்...