×

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 8 வழித்தடங்களில் கூடுதல் அரசு பஸ்கள் இயக்கம்-கலெக்டர் தகவல்

ராணிப்பேட்டை : பள்ளி மாணவர்கள் பஸ் படிக்கட்டுகளில் பயணிப்பதை தடுக்க, ராணிப்பேட்டை மாவட்டத்தில் 8 வழித்தடங்களில் கூடுதலாக 14 நடைகள் அரசு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் நலன் கருதி கூடுதல் பஸ்கள் இயக்குவது தொடர்பாக ஆலோசனை கூட்டம்  நேற்று நடந்தது. இதில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி பேசியதாவது:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அரசு பஸ்களின் படிக்கட்டுகளில் பயணம் செய்வதை தடுக்கும் விதமாகவும், நெரிசலில் பயணிப்பதை தடுக்கும் விதமாகவும் பள்ளி வேலை நேரம், அவர்களின் பயன்பாட்டிற்கு இயக்கப்படும் அரசு பஸ்கள் மற்றும் தனியார் பஸ்கள் ஆகியவை குறித்து, கடந்த 3 மாதங்களாக வட்டார போக்குவரத்து அலுவலர், முதன்மை கல்வி அலுவலர், காவல்துறை அலுவலர்கள், அரசு போக்குவரத்துக்கழக அலுவலர்கள் ஆகியோரை கொண்டு பல்வேறு கட்ட களஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.
அவ்வப்போது சூழ்நிலைக்கேற்ப ஆற்காடு, ராணிப்பேட்டை, சோளிங்கர், ஆற்காடு உட்பட 15 வழித்தடங்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் 30 நடைகள் புதியதாக பஸ்கள் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக அடுத்த மாதம்(மே) 2ம் தேதி முதல் 8 வழித்தடங்களில் கூடுதலாக 14 நடைகள் அரசு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.பஸ்கள் இயக்கப்படும் விவரம்: நேரம்: காலை 7.15, 7.30- தடம் எண்: 7B/A, வானாபாடி- முத்துக்கடை. காலை 7.45, 8.10- தடம் எண்: 7B/B, செட்டிதாங்கல்- முத்துக்கடை. காலை 7.35- தடம் எண்: 400சி, சோளிங்கர்- ஆற்காடு. மாலை 4.20- தடம் எண்: 486 ஏ, அரக்கோணம்- ஆற்காடு. காலை 7.45, 8.15- தடம் எண்: 123N, விஷாரம்- ஆற்காடு. மாலை 4.15, 4.30- தடம் எண்:123H, விஷாரம்- ஆற்காடு. மாலை 4.25, 6.10- தடம் எண்: T6, அரக்கோணம்- பாணாவரம். மாலை 3.00, 4.00- தடம் எண்: T2, அரக்கோணம்- ஆட்டுப்பாக்கம்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பத்திரிக்கைகளில் வெளிவந்த செய்திகளின் அடிப்படையில் மாணவர்களின் படிக்கட்டு பயணத்தையும் நெரிசலையும் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த 3 மாதங்களாக களஆய்வு மேற்கொண்டு, மொத்தம் 23 வழித்தடங்களில் 54 நடைகள் பஸ்கள் இயக்க நடவடிக்கை  ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளது.  
 
தற்போது புதிய நடைகள் கூடுதலாக தொடங்கப்படுகிறது. இம்மாவட்டத்தில் கல்வி பயிலும் அனைத்து மாணவர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி படிக்கட்டு பயணத்தை தவிர்த்து உயிரிழப்புகள் மற்றும் விபத்துகள் ஏற்படுவதை தவிர்த்திட வேண்டும். மேலும், பெற்றோர்களும் தங்களது பிள்ளைகள் பயணம் செய்வதை அடிக்கடி கண்காணித்து அவர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.இதில், அரசு போக்குவரத்து கழக வேலூர் மண்டல பொதுமேலாளர் நடராஜன், ராணிப்பேட்டை வட்டார போக்குவரத்து அலுவலர் ராமலிங்கம், குற்றவியல் தாசில்தார் விஜயகுமார்.  துணை மேலாளர் வணிகம் பொன்னுபாண்டி, துணை மேலாளர் (இயக்கம்) கலைச்செல்வன், திருவள்ளூர் மாவட்ட துணை மேலாளர் ரவி மற்றும் ஆற்காடு, திருத்தணி கிளை மேலாளர்கள் கலந்து கொண்டனர்.



Tags : Ranipettai District , Ranipettai: To prevent school children from traveling on the bus stairs, an additional 14 of the 8 lanes in Ranipettai district
× RELATED ராணிப்பேட்டை மாவட்டத்தில்...