×

காரைக்குடியில் நடைபெற்று வரும் பாதாளச் சாக்கடை பணிகள் விரைந்து முடிக்கப்படும்: பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு பதில்

சென்னை: காரைக்குடியில் நடைபெற்று வரும் பாதாளச் சாக்கடை பணிகள் விரைந்து முடிக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். 138 நகராட்சிகளில் நடைபெறும் பாதாளச் சாக்கடை திட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்யப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.  செங்கல்பட்டு நகராட்சியில் பாதாளச் சாக்கடை திட்ட பணிகள் எப்போது தொடங்கப்படும்? என்று உறுப்பினர் வரலட்சுமி கேள்வி எழுப்பினார். மதுராந்தகம் நகராட்சியில் முறையாக பாதாளச் சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படுமா? என உறுப்பினர் கேள்வி எழுப்பியிருந்தார். காரைக்குடியில் நடைபெற்று வரும் பாதாளச் சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.


Tags : Karaikudi ,Minister ,KN Nehru , Karaikudi, Sewerage, Assembly, Minister KN Nehru
× RELATED காரைக்குடியில் ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவின் ரோடு ஷோ ரத்து!