சென்னை: நாமக்கல்- பரமத்தி வேலூர் இருவழிச்சாலையை, 4 வழிசாலையாக மாற்றியமைக்கும் பணி நடைபெற்று வருகிறது என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு சட்டப்பேரவையில் கூறியுள்ளார். நாமக்கல் புறவழிச்சாலை திட்டப்பணிகளுக்கு 142 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்ட வருகிறது. நாமக்கல் புறவழிச்சாலைக்காக ரூ.87 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு திட்ட மதிப்பீடு செய்து பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தகவல் தெரிவித்துள்ளார்.