சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். வெளிநடப்பு செய்வதாக தெரிவித்த பிறகும் அதிமுக உறுப்பினர்கள் பேரவையில் கோஷங்களை எழுப்பிய நிலையில் சபாநாயகர் உத்தரவை அடுத்து அவை காவலர்கள் மூலம் அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர்.