சென்னை: இங்கிலாந்தின் House of Lords அரங்கில் உரையாற்றிட முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வரை, இங்கிலாந்து தொழிலதிபர் அமர்ஜித் சிங் சந்தித்து அழைப்பு விடுத்தார். House of Lords அரங்கில் உரையாற்ற அழைப்பு விடுத்து இந்திய வணிகக்குழுவின் தலைவர் பட்டேலின் கடிதத்தை வழங்கினார்.