சென்னை: ஆவடியில் உள்ள மத்திய ரிசர்வ் காவல் படை பயிற்சி பள்ளியில், கடந்த ஓராண்டாக பயிற்சி பெறும் விருதுநகரை சேர்ந்த மணிகண்டன்(24), ஆஷிஷ்(24) ஆகிய இருவரிடையே நேற்று முன்தினம் இரவு மோதல் ஏற்பட்டது. இதில் மணிகண்டன், ஆஷிஷ்யை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் தலையில் பலத்த காயமடைந்த ஆஷிஷ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.