×

காட்டுப்பகுதியில் உடல் மீட்பு பலாத்காரம் செய்து இளம்பெண் கொலை? காரைக்குடி அருகே பரபரப்பு

காரைக்குடி: காரைக்குடி அருகே காட்டுப்பகுதியில் இளம்பெண் உடல் மீட்கப்பட்டது. இவர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள புதுவயல் சுதந்திரபுரம் காலனியை சேர்ந்தவர் சுகன்யா (30). திருமணமாகவில்லை. இவர் நேற்று முன்தினம் மதியம் திடீரென காணாமல் போனார். குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. எனவே சாக்கோட்டை போலீசில் புகார் செய்தனர். இந்நிலையில் நேற்று காலை சிவகங்கை - புதுக்கோட்டை மாவட்ட எல்லையில் உள்ள காட்டு பகுதியில் ஆடைகள் அலங்கோலமாக தெரிய சுகன்யா இறந்து கிடப்பதாக தகவல் வந்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனிடையே சுகன்யாவின் சாவில் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, காரைக்குடி சாலையில் உறவினர்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர். அங்கு வந்த போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்.

Tags : Karaikudi , Rape and murder of a teenager in the wild? Excitement near Karaikudi
× RELATED உடல் பருமன் குறைய சிறுதானியங்கள் சாப்பிடுங்க