×

பெரம்பூர் அருகே ஓடும் ரயிலில் கல்லூரி மாணவர்கள் பயங்கர மோதல்

பெரம்பூர்:  சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து திருப்பதி செல்லும் சப்தகிரி ரயிலில் மாநில கல்லூரி மாணவர்கள் 20க்கும் மேற்பட்டோர் நேற்று ஏறினர். இதேபோல், சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து திருவள்ளூர் செல்லும் மின்சார ரயிலில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 20க்கும் மேற்பட்டோர் ஏறி உள்ளனர். இவர்கள் ஒருவரை ஒருவர் கிண்டலடித்து சென்றுள்ளனர். பெரம்பூர்  கேரேஜ்   ரயில் நிலையம் சென்றபோது,  பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் தண்ட
வாளத்தில் கிடந்த கல்லை எடுத்து மாநில கல்லூரி மாணவர்கள் மீது சரமாரியாக வீசியுள்ளனர்.  இதனால், சப்தகரி ரயிலில் வந்த மாநிலக் கல்லூரி மாணவர்கள்  அபாய சங்கிலியை் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தியுள்ளனர். ரயில் நின்றவுடன் கீழே இறங்கி பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுடன் பயங்கர மோதலில் ஈடுபட்டனர். ரயில்வே போலீசார், மோதலில் ஈடுபட்ட 15  கல்லூரி மாணவர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர்.



Tags : Perambur , College students clash on a train near Perambur
× RELATED சம்பளம் கேட்ட ஊழியருக்கு அடி: உரிமையாளர் உள்பட 2 பேர் கைது