கொழும்பு: இலங்கை பிரதமர் ராஜபக்சே அரசுக்கு அளித்து வந்த ஆதரவை தொழிலாளர் காங்கிரஸ் திரும்ப பெறுவதாக அறிவித்திருக்கிறது. ஆதரவை வாபஸ் பெற்ற நிலையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் ஜீவன் தொண்டமான் சமுதாய உட்கட்டமைப்பு இணை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். ஜீவன் தொண்டமானுடன் எம்.பி. மருதபாண்டி ராமேஸ்வரமும் சுயேச்சையாக செயல்பட தீர்மானம் செய்யப்பட்டிருக்கிறது.