கடலூர்: கடலூர் அடுத்த பரங்கிப்பேட்டையில் இருதரப்பினரிடையே பயங்கர மோதல் நடைபெற்றது. வாகனத்தின் சைரனை அடித்ததால் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. ரவுடிகளுடன் வந்து, இரவு நேரத்தில் ஒரு தரப்பினர் தாக்குதல் நடத்தினர். இது தொடர்பான பரபரப்பு காட்சிகள் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.