×

கடலூர் அருகே மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: கடலூர் அருகே மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த சுதந்திரதேவியின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மருதத்தூரில் கோயில் குடமுழுக்கு நடந்தபோது அருகில் இருந்த கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து சுதந்திரதேவி பலியானார். பலியான சுதந்திரதேவி குடும்பதினருக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், மருதத்தூர் கிராமத்தில் உள்ள கோவிலில் (10-9-2023) இன்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, கோவிலுக்கு அருகில் அமைந்துள்ள கட்டிடத்தின் வெளிப்புற மேற்கூரை எதிர்பாராதவிதமாக ஸ்ரீமுஷ்ணம் வட்டம், காவனூர் கிராமத்தைச் சேர்ந்த சுதந்திரதேவி(வயது 15), த/பெ. மணிகண்டன் என்பவர் மீது இடிந்து விழுந்ததில், அவருக்கு காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன்.

உயிரிழந்த சுதந்திரதேவியின் பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு அவரது குடும்பத்தினருக்கு ரூ.2 இலட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன் என கூறப்பட்டுள்ளது.

The post கடலூர் அருகே மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,Chief Minister of ,Cadalore ,G.K. ,Stalin ,Chennai ,Deity of Freedom ,Chief Minister of Independence ,G.K. Stalin ,Marudathur ,Chief Minister ,
× RELATED கடலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை