சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் தாய், சேய் நல தொகுப்பு திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சிசுவின் குறைபாடுகளை கருவிலேயே கண்டறியும் சிறப்பு திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார். இந்தியாவில் முதல்முறையாக தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. தமிழக சுகாதார சீரமைப்பு திட்டம் சார்பில் மாநில சுகாதார பேரவை அமைக்கப்பட்டுள்ளது.