மதுரை: கோயிலை பொறுத்தவரை கடவுள் மட்டுமே விஐபி என உயர்நீதிமன்ற கிளை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் கருத்து தெரிவித்துள்ளார். திருச்செந்தூர் கோயிலில் சிறப்பு அனுமதி சீட்டை முறைகேடாக பயன்படுத்தும் ஊழியர்கள் மீது நடவடிக்கை தேவை எனவும் 40 ஆயுதப்படை காவலர்களை தூத்துக்குடி எஸ்.பி.நியமிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற கிளை கூறியுள்ளது.