×

வாடிக்கையாளர் போல் நடித்து நகைக் கடையில் 20 கிராம் தங்கம் திருட்டு: 2 பெண்களுக்கு வலைவீச்சு

பெரம்பூர்: வாடிக்கையாளர் போல் நடித்து நகைக்கடையில் 20 கிராம் தங்கம் திருடிச்சென்ற இரண்டு பெண்களை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை பெரம்பூர் மாதவரம் நெடுஞ்சாலையில் ஒரு நகைக்கடை உள்ளது. நேற்று முன்தினம் மாலை நகைக்கடைக்கு 2 பெண்கள் வந்தனர். அவர்கள், கடை ஊழியர் கவுசல்யாவிடம், ‘’தங்க காப்பு வாங்கவேண்டும். மாடல் காண்பியுங்கள்’ என்று கேட்டுள்ளனர். இதையடுத்து கடையில் இருந்த ஒவ்வொரு மாடலாக ஊழியர் எடுத்து காண்பித்துள்ளார். ஆனால் நிறைய மாடல்களை பார்த்துவிட்டு எங்களுக்கு பிடித்த மாதிரி எதுவும் இல்லை என்று கூறிவிட்டு இரண்டு பெண்களும் அங்கிருந்து சென்றுவிட்டனர். இதன்பிறகு அன்றைய தினம் இரவு நகைகளை கணக்கெடுத்தபோது 20 கிராம் எடைகொண்ட தங்க காப்பு காணாமல் போனது கண்டு ஊழியரும் மேலாளர் பாஸ்கரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து நகைக் கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது 2 பெண்கள் காப்பை திருடிச்செல்வது பதிவாகியிருந்தது. இதுபற்றி மேலாளர் பாஸ்கர் திருவிக.நகர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து இரண்டு பெண்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.


Tags : Customer, jewelry store, 20 grams, gold, theft
× RELATED சென்னையின் முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்