திருவண்ணாமலை: சேத்துப்பட்டில் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விடுதி காப்பாளர் போக்ஸோவில் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட மாணவர்கள் குழந்தைகள் நல பாதுகாப்பு உதவி மையத்தை தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளனர். விடுதி காப்பாளர் துரைபாண்டியனை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.