×

கட்சி கட்டுப்பாட்டை மீறிய பூவிருந்தவல்லி நகர திமுக செயலாளர் எம்.ரவிக்குமார் சஸ்பெண்ட்: துரைமுருகன் நடவடிக்கை

சென்னை: கட்சி கட்டுப்பாட்டை மீறியதற்காக பூவிருந்தவல்லி நகர திமுக செயலாளர் எம்.ரவிக்குமார் சஸ்பெண்ட் செய்து பொது செயலாளர் துரைமுருகன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
திமுக பொது செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பு:
திருவள்ளூர் மத்திய மாவட்டம், பூவிருந்தவல்லி நகர திமுக செயலாளர் எம்.ரவிக்குமார், கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி (சஸ்பெண்ட்) வைக்கப்படுகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Poovirunthavalli city ,DMK ,M Ravikumar , Party Control, Poovirunthavalli City DMK Secretary, M. Ravikumar Suspended, Thuraimurugan,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி