×

புதர்மண்டி கிடக்கும் நிழற்குடையை சீரமைக்க வேண்டும்-பொன்னம்படுகை மக்கள் கோரிக்கை

வருசநாடு : கடமலை மயிலை ஒன்றியம் பொன்னம்படுகை ஊராட்சிக்குட்பட்ட தெய்வேந்திரபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பொது மக்களின் வசதிக்காக பேருந்து நிழற்குடை அமைக்கப்பட்டது. அதன்பின் பல ஆண்டுகளாக போதிய பராமரிப்பின்றி நிழற்குடை உள்ளது.இந்நிலையில் குடிமகன்களின் கூடாரமாக மாறி வருகிறது. மேலும். முட்புதர்கள் அடர்ந்து விஷ ஜந்துக்கள் உலாவரும் இடமாகவும் காட்சியளிக்கிறது. இதனால், அப்பகுதி கிராம மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

வெயிலில் தினந்தோறும் நடந்து பேருந்து ஏற வேண்டிய நிலை உள்ளது. பெண்கள், முதியோர்கள் உள்ளே செல்ல முடியாமல் நிழற்குடை அருகே உள்ள கடும் வெயிலில் அமர்ந்து இருந்து பேருந்துக்கு காத்திருக்க வேண்டிய அவலம் ஏற்படுகிறது.இந்த நிழற்குடையை சீரமைத்து பயணிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Putharmandi , Varusanadu: Kadamalai Mayilai Union Ponnampadugai Panchayat Deivendrapuram and the surrounding villages
× RELATED சிங்கம்புணரி அருகே புதர்மண்டி கிடக்கும் நிழற்குடை