×

சிங்கம்புணரி அருகே புதர்மண்டி கிடக்கும் நிழற்குடை

சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே அணைக்கரைப்பட்டி கிராமத்திலுள்ள பேருந்து நிறுத்த நிழற்குடை கட்டிடம் பல ஆண்டுகளாக பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் புதிய நிழற்குடை கட்டிடம் அமைக்க திட்டமிடப்பட்டு கட்டிமுடிக்கப்பட்டது. இந்நிலையில் பழைய நிழற்குடை கட்டிடத்தின் மேல் தளம் சேதமடைந்து கீழே விழும் நிலையில் உள்ளது. கட்டிடத்தை சுற்றி புதர்கள் மண்டி காணப்படுகிறது. இந்த கட்டிடத்திற்குள் சிறுவர்கள் சென்று விளையாடுகின்றனர்.

மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில், கட்டிடம் எப்பொழுது விழும் என்ற நிலை இருப்பதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே நிழற்குடை கட்டிடத்தை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Putharmandi ,Singampunari , Singapunari,Bus stop,Rainy season
× RELATED வாக்குச்சாவடிக்குள் வலிப்பு வந்து...