சென்னை: மக்களின் கருத்துக்களை புறக்கணித்து ஒன்றிய அரசு ஒரு கருத்தை திணிக்க நினைப்பது நடக்காது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்திருக்கிறார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் நிராகரித்துள்ளது பொருத்தமற்றதாக உள்ளது என்று தெரிவித்தார்.