சென்னை: திருப்பி அனுப்புவது ராஜ்பவனின் மேட்டிமை, மீண்டும் அனுப்புவது சட்டமன்றத்தின் உரிமை என்று கவிஞர் வைரமுத்து ட்வீட் செய்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
திருப்பி அனுப்புவது
ராஜ்பவனின் மேட்டிமை
மீண்டும் அனுப்புவது
சட்டமன்றத்தின் உரிமை
நாளை
முதலமைச்சர் கூட்டும்
அனைத்துக்கட்சிக்
கூட்டத்தின் முடிவை
ராஜ்பவனும்
ஜனாதிபதி மாளிகையும் மட்டுமல்ல
இருள்கட்டிக் கிடக்கும்
ஏழைக் குடிகளின்
ஓலைக் குடிசைகளும்
கண்ணில் நீரோடு
கவனிக்கின்றன என குறிப்பிட்டிருக்கிறார்.