சென்னை: கடலூர் மாவட்டம் வடலூரில் தோட்டக்கலை பூங்கா அமைக்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 3.20 ஏக்கரில் அமைக்கப்படும் பூங்காவில் நடைபாதைகள், மூலிகைச் செடிகள், குளம், பார்வையாளர் இருக்கை வசதி, சிறுவர் பூங்கா ஆகியவை இடம்பெற உள்ளன.