சென்னை: வேட்புமனுத் தாக்கல் நாளை நிறைவடையவுள்ள நிலையில் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தலைமையில் ஆலோசனை நடைபெறவுள்ளது. மாநில தேர்தல் ஆணையர் தலைமையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் காவல் கண்காணிப்பாளர்களும் பங்கேற்க உள்ளனர். வேட்பு மனுக்கள் பரிசீலனை, பதற்றமான வாக்குச்சாவடிகளின் பாதுகாப்பு, கண்காணிப்பு குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.