சென்னை: சென்னை மாநகராட்சி தேர்தலை எதிர்கொள்ளும் 200 வார்டுகளில், பதற்றமான வாக்குச்சாவடிகள் எவை?, எவை? என இனங்காணும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை தேர்தல் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான ககன்தீப் சிங் பேடி, சென்னை மாநகர காவல் ஆணையர் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடைபெற உள்ளது. பதற்றமான வாக்குச்சாவடிகள் குறித்து பிற்பகல் 3 மணியளவில் ககன்தீப் சிங் பேடி தலைமையில் ஆலோசனை நடைபெற உள்ளது.